Published : 20 May 2018 12:12 PM
Last Updated : 20 May 2018 12:12 PM

வரும் 22-ம் தேதி திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

 

வருகிற 22-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் வருகிற 22-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காவிரி பிரச்சினையில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்க திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட 9 கட்சிகளின் தலைவர்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 17-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காவிரி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 16-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. ‘காவிரி மேலாண்மை வாரிய தலைமை அலுவலகத்தை டெல்லியில் அமைக்க வேண்டும்’ என தமிழக அரசு வலியுறுத்தியது. இந்த வழக்கின் விசாரணை 17-ம் தேதியும் நடைபெற்றதால் அன்று நடக்கவிருந்த 9 கட்சித் தலைவர்களின் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

காவிரி வழக்கில் கடந்த 18-ம் தேதி இறுதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு தாக்கல் செய்த காவிரி வரைவு செயல் திட்டத்தை ஏற்றுக் கொண்டு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவிட்டது. காவிரி விவகாரத்தில் அனைத்து அதிகாரங்களும் கொண்டதாக இந்த அமைப்பு இருக்கும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் காவிரி விவகாரம் குறித்து விவாதிக்கவும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதற்காகவும் திமுக சார்பில் வரும் 22-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதை மிஸ் பண்ணாதீங்க:

பெட்ரோல், டீசல் விலை உயர்வு கொள்ளைக்கு முடிவு கட்டப்பட வேண்டும்: ராமதாஸ்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x