Published : 08 Jul 2019 05:54 PM
Last Updated : 08 Jul 2019 05:54 PM
ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து சவுதி தேசிய ஊடகம் , “ஏமன் தலைநகர் சனாவில் சவுதிப் படைகள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தின. இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதத்தில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதியின் அபா விமான நிலையத்தில் தொடர் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் சவுதி ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
இதில் அதிபர் மன்சூருக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT