Published : 04 Jul 2019 03:28 PM
Last Updated : 04 Jul 2019 03:28 PM

அமெரிக்கா விரோதத்துடன் உள்ளது: வடகொரியா குற்றச்சாட்டு

பேச்சுவார்தைக்குத் தயாராக இருந்தாலும் அமெரிக்கா விரோத நடவடிக்கையைத் தொடர்வதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வடகொரியா தரப்பில், “எங்கள் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தொடர்வதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.இதற்கான படிவத்தில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

அதுவும் கிம்முடன் நட்பாக கை குலுக்க விரும்புவதாக ட்ரம்ப் தெரிவித்த அதே நாளில்,பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தாலும் அமெரிக்கா விரோத நடவடிக்கையைத் தொடர்கிறது'' என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஜி 20 மாநாட்டுக்குப் பிறகு வடகொரியா, தென் கொரியாவைப் பிரிக்கும் பான்முன்ஜன் பகுதியில் உள்ள ட்ரூஸ் கிராமத்துக்கு வந்த ட்ரம்ப் வடகொரிய அதிபர் கிம்மைச் சந்தித்தார்.

அதன் பின்னர் ட்ரம்ப், கிம் ஜாங் உன் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.இச்சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று வடகொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சரியான நேரத்தில் வடகொரியா மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா தளர்த்த வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x