Published : 15 Jun 2019 06:41 PM
Last Updated : 15 Jun 2019 06:41 PM
ஹார்மாஸ் கடற்பகுதியில் எண்ணெய்க் கப்பலைத் தாக்கியது ஈரான்தான் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுத சோதனை ஒப்பந்த மீறலில் ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் அதிகரித்த நிலையில் வளைகுடா பகுதியில் தொடர்ந்து எண்ணெய்க் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதற்கு ஈரானை அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
அந்த வகையில் வியாழக்கிழமையன்று ஹர்மஸ் கடற்பகுதியில் (உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்கான ஒரு முக்கிய நீர்வழி) இரண்டு எண்ணெய்க் கப்பல்களைத் தாக்கியது ஈரான்தான் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ குற்றம் சாட்டியிருந்தார்.
இதனை ஈரான் திட்டவட்டமாக மறுத்ததுடன், தாக்குதலுக்கு உள்ளான கப்பலுக்கு உதவியதாகவும், கப்பலிலிருந்த குழுவைக் காப்பாற்றியதாகவும் பதிலளித்தது.
இந்நிலையில் இந்தத் தாக்குதலை ஈரான் தான் நடத்தியுள்ளது என்று அமெரிக்க அதிபர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப் கூறும்போது, ''ஹார்மஸ் எண்ணெய்க் கப்பல் தாக்குதலை ஈரான் தான் நடத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவை அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT