Last Updated : 07 Jun, 2019 11:58 AM

 

Published : 07 Jun 2019 11:58 AM
Last Updated : 07 Jun 2019 11:58 AM

துபாய் சாலை விபத்தில் 8 இந்தியர்கள் உள்பட 17 பேர் பலி

துபாயில் சுற்றுலாப் பேருந்து சாலைத்தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானதில்  8 இந்தியர்கள் உள்பட 17 பேர் பலியானார்கள்.

இது குறித்து இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

ஓமனில் உள்ள மவாஸலாட் என்ற  அரசு சார்ந்த நிறுவனத்தின் பேருந்து நேற்று விபத்தில் சிக்கியது. மஸ்கட்டில் இருந்து துபாய் நகருக்கு நேற்று  சென்ற இந்த பேருந்தில் இந்தியர்கள் உள்ளிட்ட பல நாட்டவர்கள் பயணித்தனர்.

பேருந்து நேற்று மாலை 6 மணி அளவில் தூபாயின் ரஷிதியா பகுதியை நோக்கி வந்தபோது, தவறுதலாக பேருந்து செல்ல தடைவிதிக்கப்பட்ட பகுதிக்குள் சென்றது. அங்கு வைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்பு மற்றும் விளம்பரப் பலகைமீது பேருந்து பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 8 இந்தியர்கள் உள்Hட 17 பேர் பலியானார்கள். 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் பலியான இந்தியர்கள்  ராஜகோபாலன், பெரோஷ் கான்  பதான், ரேஷ்மா பெரோஷ்கான் பதான், தீபக் குமார், ஜமாலுதீன், அரக்கவீட்டில், கிரண் ஜானி, வாசுதேவ், திலக்ராம் ஜவஹர் தாக்கூர் ஆகியோர்  என தெரியவந்தது.

விபத்தில் பலியான இந்தியர்களின் உறவினர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். அதற்கான அனைத்து உதவிகளையும் இந்தியத்தூதரகம் செய்துள்ளது. பலியானவர்களின் உறவினர்களுடன் தொடர்பில் இந்தியத் தூதரகம் இருந்து வருகிறது.

இந்தியர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியர்களுக்கு உதவுவதற்காக சஞ்சீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். உதவிகள் தேவைப்படுவோர், +971- 504565441 அல்லது  +971-565463903 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x