Published : 24 May 2019 03:00 PM
Last Updated : 24 May 2019 03:00 PM
அமெரிக்க அளிக்கும் அழுத்தத்துக்கு சரணடைய மாட்டோம் என்று அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறும்போது, “அமெரிக்கா அளிக்கும் அழுத்தங்களுக்கு ஈரான் சரணடையாது. ஈரான் தாக்குதலுக்கு உண்டானால் கூட தான் கொண்ட குறிக்கோளிலிருந்து ஈரான் பின் வாங்காது” என்றார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்து வந்த ட்ரம்ப் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. இந்த நிலையில் அணுஆயுத ஒப்பந்தத்தில் பிற நாடுகளின் ஆதரவுடன் ஈரான் தொடர்ந்து வருகிறது.
இதில் விதிமுறைகளை பின்பற்ற முடியாது என்று சமீபத்தில் கூறியது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் மோதல் அதிகமாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT