Last Updated : 24 Apr, 2019 04:00 PM

 

Published : 24 Apr 2019 04:00 PM
Last Updated : 24 Apr 2019 04:00 PM

இலங்கை தற்கொலைப் படை தாக்குதல்; பலியான இந்தியர் உடல்களை விமானத்தில் அனுப்பிவைக்க முடிவு

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளில் பலியான இந்தியர்கள் 10 பேரில் 9 பேரின் உடல்கள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை அரசின் உயரதிகார்கள் இன்று தெரிவித்ததாவது:

இலங்கையில் கடந்த ஈஸ்டர் (ஞாயிறு அன்று) பண்டிகையின்போது கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் தற்கொலைப் படை தாக்குதலில் 359 பேர் உயிரிழந்தனர். இதில் 10 பேர் இந்தியர்கள் என்று கண்டறியப்பட்டது.

இதில் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ள எஸ்.ஆர்.நாகராஜ், எச்.சிவக்குமார், கே.ஜி.ஹனுமந்ராயப்பா, கே.எம்.லஷ்மி நாராயணா, எம்.ரங்கப்பா, வி.துளசி ராம், ஏ.மேரெகவுடா, எச்.புட்டராஜூ மற்றும் ஆர்.லக்ஷண் கவுடா ஆகிய 9 பேரின் பட்டியலை இந்தியத் தூதரகம் இன்று தொடர்ச்சியான ட்வீட்களில் வெளியிட்டது.

உயிரிழந்தோரின் உடல்கள் நான்கு தனித்தனி விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் உயிரிழந்தோரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த இத்துயரச் சம்வத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த மொத்தம் 34 பேர் பலியானதாக கூறப்பட்டது.

அதன் விவரம்:

இந்தியாவிலிருந்து 10 பேர், டென்மார்க்கிலிருந்து 3 பேர், ஜப்பான், நெதர்லாந்து, போர்ச்சுக்கல் மற்றும் வங்கதேசம் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்து தலா ஒருவர், சீனா, சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து தலா இருவர் மற்றும் இங்கிலாந்திலிருந்து ஆறுபேர் அமெரிக்காவிலிருந்து இருவர் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து குடிமக்கள் இருவர் மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை குடிமக்கள் இருவர்.

மேலும், இச்சம்பவங்களின்போது வெளிநாட்டினர் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆனால் அவர்கள் யார் என அடையாளம் தெரியாத நிலையில் சரியான விவரம் வெளியிட முடியவில்லை எனவும் கொழும்பு நீதித்துறை உடற்கூறு மருத்துவ அதிகாரிகள் தெரிவித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த வெளிநாட்டினர் 16 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கை குண்டுவெடிப்புகளுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுள்ளது. இத் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த தற்கொலைப் படை தீவிரவாதிகளை இலங்கை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.

இலங்கையில் ஏழு தற்கொலைப் படை தீவிரவாதிகள் ஈஸ்டர் ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஆடம்பர ஹோட்டல்களால் பேரழிவுகரமான தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x