Published : 20 Apr 2019 07:39 PM
Last Updated : 20 Apr 2019 07:39 PM

தாய்லாந்தில் அனுமதியின்றி கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி: மரண தண்டனை அச்சத்தில் தலைமறைவு

தாய்லாந்தில் கடலுக்குள் காதல் ஜோடி ஒன்று வீடு கட்டியது சட்டவிரோதம் என்றும் நாட்டின் இறையாண்மையை மீறிய செயல் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தக் காதல் ஜோடிக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

 

அமெரிக்காவைச் சேர்ந்த பிட்காயின் முதலீட்டாளர் சாட் எல்வர்ட்டோவ்ஸ்கி  தன் காதலி சுப்ரானி தெப்தெட் என்பவருடன்  சேர்ந்து கடலில் கான்கிரீட் வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த நாட்டின் புக்கெட் கடற்கரையிலிருந்து 12 நாட்டிகல் மைல் தூரத்தில் இந்த வீட்டைக் கட்டியுள்ளார்.

 

அங்கு மது அருந்துவது போன்ற புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.  இந்நிலையில் தாய்லாந்து கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது  கடலில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

 

உடனடியாக வீட்டை வீடியோ எடுத்தக் கடற்படையினர் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.  முன் அனுமதியின்றி உரிமையை மீறி தாய்லாந்தின் இறையாண்மைக்கு எதிராக இந்த வீடு கடலுக்குள் கட்டப்பட்டுள்ளதாக வழக்கு பதிவாகியுள்ளது.  இதனையடுத்து காதல் ஜோடி தலைமறைவாகி விட்டனர்.

 

அவர்கள் சிக்கி வழக்கு நடந்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை கூட கிடைக்க வாய்ப்பிருப்பதாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x