Published : 13 Apr 2019 11:50 AM
Last Updated : 13 Apr 2019 11:50 AM

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், “ இந்தோனேசியாவில் கிழக்கு பகுதியில் உள்ள சுலவேசி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியது. இதனைத் தொடர்ந்து மிதமான  சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.

இந்த  நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட முழு பாதிப்புகள் இதுவரை வெளிவராத நிலையில், ஒருவர் பலியானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் அனைவரும் சாலைக்கு ஓடி வந்ததாகவும், நில நடுக்கத்தின் அதிர்வுகளை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவில் கடந்த ஆண்டு ரிக்டர் அளவில் 7.5 ஆக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் கிட்டதட்ட 4,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x