Published : 30 Mar 2019 05:25 PM
Last Updated : 30 Mar 2019 05:25 PM

சீன தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் பலி

சீனாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ  விபத்தில் 5 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “ சீனாவின் ஷாண்டாங் மாகாணத்தில் உள்ள தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். பலியானவர்கள் அனைவரும் இரவு நேர பணியாளர்கள்” என்று தெரிவித்துள்ளனர்.

தொழிற்சாலையிலிருந்து வாயு வெளியாகி தீ விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தொடர்ந்து வேதியியல் தொழிற்சாலையில் thii விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி, சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஷாங்காய் நகரத்திலுள்ள யான்செங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 47 பேர் பலியாகினர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு சீனாவில் தியாஜின் வேதி தொழிற்சாலையில் ஏற்பட்ட தொடர் வெடி விபத்தில் 165 பேர் பலியாகினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x