Published : 23 Mar 2019 05:50 PM
Last Updated : 23 Mar 2019 05:50 PM
ஆப்கானிஸ்தானில் நடந்த விவசாயிகள் கொண்டாட்ட நிகழ்வின்போது ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 2 பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆப்கான் அதிகாரிகள் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் தென்பகுதியில் ஹெல்மண்ட் மாகாணத்தில் இன்று (சனிக்கிழமை) விவசாயிகளுக்கான கொண்டாட நிகழ்வு நடந்தது. இங்கு சுமார் 1000 பேர் கூடியிருந்தனர். இதில் திடீரென ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 2 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குண்டுவெடிப்பை தொடர்ந்து நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது” என்றார்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
முன்னதாக ஆப்காகானிஸ்தானில் வியாழக்கிழமை நடந்த ஆண்டு விழாவின்போது நடந்த குண்டு வெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இதற்கு ஐஎஸ் பொறுப்பேற்றது.
ஆப்கானிஸ்தானைத் தலிபான் தீவிரவாதிகள் பிடித்து வைத்துக்கொண்டு பயங்கர கட்டுப்பாடுகள் விதித்தனர். அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளின் அதிரடி நடவடிக்கைகளால் கடந்த 2001-ம் ஆண்டு தலிபான்கள் பிடியில் இருந்து ஆப்கன் விடுவிக்கப்பட்டது.
எனினும், ஆப்கானிஸ்தானில் அண்மைக்காலமாக ரதீவிரவாதிகள் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT