Published : 15 Mar 2019 11:34 AM
Last Updated : 15 Mar 2019 11:34 AM

பிரேசிலில் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் துப்பாக்கிச் சூடு: 8 பேர் பலி

பிரேசிலில் பள்ளி ஒன்றில் முன்னாள் மாணவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள்  8 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ''பிரேசிலின் சா பாலோ நகரத்தில் ரால் பிரேசில் பள்ளியில் முகமூடி அணிந்து வந்த இரு நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகினர். இதில் 5 பேர் மாணவர்கள்.

பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் இறுதியில் தங்களையே சுட்டுக் கொண்டு இறந்தனர்'' தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸார் தரப்பில், ’’இந்த துப்பாக்கிச் சூட்டை பள்ளியின் முன்னாள் மாணவர்கள்  நடத்தியுள்ளனர். 17 வயது கில்ஹேர்ம் டாய்சி மோன்டிரோ மற்றும் 25 வயது லுயிஸ் ஹென்றிகோ ஆகிய இரண்டு மாணவர்களும் இது தொடர்பாக ஓராண்டாகத் திட்டம் தீட்டி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

பள்ளியில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு பிரேசிலையே அதிர வைத்துள்ளது. 

துப்பாக்கிச் சூட்டில் மரணம் அடைந்த மாணவர்களின் இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு அஞசலி செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x