Published : 11 Feb 2019 12:21 PM
Last Updated : 11 Feb 2019 12:21 PM
குவைத்தில் திருமணமான மூன்றே நிமிடங்களில் புதுமணத் தம்பதியினர் விவாகரத்து பெற்றது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
மாறிவரும் காலகட்டத்தில் விவாகரத்து என்பது இயல்பாகிவிட்டது. மணமான சில வருடங்களிலோ சில மாதங்களிலோ விவாகரத்து பெறுவதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் குவைத்தில், கல்யாணம் முடிந்த கையோடு விவாகரத்து பெற்றுள்ளனர்.
குவைத்தைச் சேர்ந்த இருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், நீதிபதியின் முன்னால் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். அப்போது புதுமணத் தம்பதி இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கணவர், மனைவியை ’முட்டாள்’ என்று திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதில் கோபமடைந்த மனைவி, திருமணத்தை நடத்தி வைத்த நீதிபதியிடமே, திருமணத்தை ரத்து செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் திருமண ஒப்பந்தம் முறிக்கப்பட்டு விவாகரத்தாக அறிவிக்கப்பட்டது.
இதனால் அவர்கள் 3 நிமிடங்கள் மட்டுமே திருமண பந்தத்தில் இருந்தனர். இது குவைத் வரலாற்றில் முதல் முறை என்று கூறப்படுகிறது.
இதனிடையே அப்பெண்ணுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ''ஆரம்பத்திலேயே கணவன் இப்படி நடந்துகொண்டால், நாட்கள் செல்லச்செல்ல இன்னும் மோசமாகிவிடும். அவரை விட்டுப் பிரிந்ததே நல்லது'' என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.
மற்றொரு நெட்டிசன், ''சின்னச் சின்ன விஷயங்களைக் கூட அனுசரித்துப் போகாவிட்டால், யாருக்குமே திருமண பந்தம் நிலைக்காது'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT