Published : 12 Nov 2018 09:21 AM
Last Updated : 12 Nov 2018 09:21 AM
நத்தையை உண்பது - குறிப்பாக மூல வியாதிக்காரர்கள் மருந்தாக உண்பது - நம்மூரில் உள்ள வழக்கம். ஆனால், முறையாகச் சமைக்காமல் இறைச்சியை உட்கொண்டால் என்ன விளைவு ஏற்படும் என்பதற்கு உதாரணம் ஆகியிருக்கிறார் ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர்.
தரையில் ஊர்ந்துசென்ற கூடில்லா நத்தையைச் சாப்பிட முடியுமா என்று நண்பர்கள் விட்ட சவாலுக்காக அதை உட்கொண்ட சாம் பல்லார்டு ஏராளமான பாதிப்புக்குள்ளாகி 8 வருடங்களுக்குப் பின் இறந்திருக்கிறார். அப்போதே, அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கொஞ்சம் சரியானவர் பின்னர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். நீண்ட போராட்டத்துக்குப் பின் சமீபத்தில் காலமானார். நத்தையின் உடலில் இருந்த நுரையீரல் புழுதான் இதற்குக் காரணம் என்று தெரியவந்திருக்கிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT