Published : 09 Nov 2018 10:00 AM
Last Updated : 09 Nov 2018 10:00 AM
மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்திலுள்ள பண்டைய கல்லறையிலிருந்து சுமார் 2,000 ஆண்டுப் பழமையான 3.5 லிட்டர் மது கண்டறியப்பட்டிருக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டியெடுத்த வெண்கலப் பானைக்குள் இந்த மது இருந்தது. முதற்கட்ட ஆய்வில் இது அரிசியில் தயாரிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதற்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட மது வகைகளும்கூட அரிசி, சோள தானியங்களால் தயாரிக்கப்பட்டவையே. விதவிதமான வண்ணம் பூசப்பட்ட களிமண் பானைகளும், வெண்கலக் கலைப்பொருட்களும் கிடைத்திருக்கின்றன. காட்டு வாத்து வடிவிலான விளக்கு, ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பான பண்டைய சீனர்களின் இறுதிச்சடங்குகள் எந்தவிதமாக இருந்திருக்கும் என்பதை அறியும்பொருட்டு, இந்த ஆராய்ச்சியில் தீவிரம் காட்டிவருகிறார்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT