Published : 05 Oct 2018 12:40 PM
Last Updated : 05 Oct 2018 12:40 PM
இந்தோனேசியாவில் சுலாவேசி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், சும்பா தீவில் பயங்கர பூகம்பம், சுனாமியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானில் ஏற்பட்டுள்ள இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவானது என்று அமெரிக்க புவியில் மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் ஹொக்கைடோ பிரதேசத்தின் சில பகுதிகளில் மட்டும் குறைந்தது 5 ஆகவும் உச்சபட்சமாக 7 ஆகவும் ஜப்பானிய தீவிர அதிர்வு அளவில் பதிவாகியுள்ளதாக ஜப்பானிய வானியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கம் ஒரு அட்சரேகைக்கு வடக்கே 42,6 டிகிரியிலும் தெற்கே 142.0 டிகிரியிலும் 30 கி.மீ.ஆழத்தில் நிலைகொண்டுள்ளது.
இந்நிலநடுக்கத்தால் காயம் அல்லது சேதம் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT