Published : 22 Sep 2018 11:42 AM
Last Updated : 22 Sep 2018 11:42 AM
ரபேல் ஒப்பந்தம் குறித்து பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு பிரான்ஸ் அரசு விளக்கம் அளித்துள்ளது.
பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்தியஅரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் ஒவ்வொரு விமானத்துக்கும் அதிகமான விலையை மத்தியஅரசு வழங்குவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.
இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறுகையில் ‘‘பிரான்ஸ் நாட்டின் ரபேல் ரக போர் விமானம் தயாரிப்பதற்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற வாய்ப்பு பிரான்ஸூக்கு வழங்கப்படவில்லை. அம்பானி நிறுவனத்துடன் மட்டுமே இணைந்து பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது’’ என தெரிவித்துள்ளார்.
அம்பானி நிறுவனத்துக்கு ஆதரவாக பிரதமர் மோடி செயல்பட்டார் என காங்கிரஸ் குற்றம்சாட்டி வரும் நிலையில் ஹாலண்டேயின் பேட்டி மத்திய அரசுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்த பிரான்ஸ் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘‘ரபேல் ஒப்ந்த விவகாரத்தில் இந்தியாவி்ல் எந்த நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற முடிவில் பிரான்ஸ் அரசு எடுக்கவில்லை. இது பிரான்ஸ் வர்த்தக நிறுவனங்களின் தனிப்பட்ட உரிமை. அதில் அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. ரபேல் ஒப்பந்த விவகாரத்தில், தரமான போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் மட்டுமே பிரான்ஸ் அரசு உறுதியாக இருந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT