Published : 11 Sep 2018 07:07 PM
Last Updated : 11 Sep 2018 07:07 PM
ஸ்மார்ட் போன், ஆடம்பர கார்களுக்கு தடை விதிக்க இம்ரான்கான் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை பிடித்தது.
இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் இம்ரான்கான் பாகிஸ்தானின் பிரதமராக பதவி ஏற்றார்.
இம்ரான் கான் பதவி ஏற்றது பாகிஸ்தானில் ஏராளமான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
கடந்த வாரம் அந்நாட்டின் ராணுவ வகுப்பில் உரையாற்றிய இம்ரான் பாகிஸ்தான் இனி எந்த நாட்டுடனும் போர் ஈடாது என்றும், மக்களின் முன்னேற்றதுக்காக கவனம் செலுத்தும் என்று தெரிவிவித்திருந்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஸ்மார்ட் போன் மற்றும் ஆடம்பர கார்களின் இறக்குமதிகளுக்கு தடை விதிக்க இம்ரான் கான் தலைமையிலான அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக பாகிஸ்தான் அரசின் பொருளாதார குழு இம்ரான்கானிடம் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் இதற்கு இம்ரான் சம்மதமம் தெரிவித்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்மார்ட் போன் மற்றும் ஆடம்பர கார்கள் போன்ற பொருட்களின் இறக்குமதியை தடை செய்வதன் மூலம் ரூ.33 ஆயிரம் கோடிவரை பொருளாதார பற்றாக்குறையை சரிகட்ட முடியும் என்று பாகிஸ்தான் கணக்கிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT