Published : 11 Sep 2018 01:06 PM
Last Updated : 11 Sep 2018 01:06 PM

ஆப்கனில் தீவிரவாதிகள் பயங்கரத் தாக்குதல்: பாதுகாப்புப் படையினர் 37 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் நடத்திய  தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 37 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஆப்கன் அரசுத் தரப்பில், "ஆப்கனின் தாஸ்சித் மற்றும் வடக்குப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிரவாதிகள் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்புப் படையினர் 37 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று கூறியுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

தலிபான்களின் இந்தத் தாக்குதல் குறித்து ஜாவ்ஸ்ஜன் மாகாணத்தின் தலைமை போலீஸ் அதிகாரி கூறும்போது, ''தலிபான்கள் காம்யாம் மாவட்டத்திலிருந்து பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது'' என்றார்.

ஆப்கானிஸ்தானின் ஒருபகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராக அரசுப் படைகளும், அமெரிக்கக் கூட்டணிப் படையும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x