Published : 24 Aug 2018 11:13 AM
Last Updated : 24 Aug 2018 11:13 AM

எஸ்.சி.ஓ. ராணுவப் பயிற்சியில் முதல்முறையாக இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ.) சார்பில் நடைபெற்ற ராணுவப் பயிற்சியில் இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்தபாதுகாப்புப் படையினர் முதன்முறையாக பங்கேற்றுள்ளனர். சீனா, ரஷ்யா, கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த 2017-ம் ஆண்டு நிரந்தர உறுப்பினர்களாக இணைந்

தன. இதனைத் தொடர்ந்து, அந்த அமைப்பு சார்பில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் இவ்விரு நாடுகளும் பங்கேற்று வருகின்றன.

அந்த வகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சார்பில் ரஷ்யாவில் பிரத்யேக ராணுவப் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான் உட்பட அந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இந்திய - பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் இணைந்து மேற்கொள்ளும் முதல் ராணுவப் பயிற்சி முகாம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 22-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை பயிற்சி நடைபெறுகிறது. தீவிரவாதத் தாக்குதல்களை முறியடிக்கும் உத்திகள் தொடர்பாக இம்முகாமில் பயிற்சிஅளிக்கப்படுவதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x