Published : 17 Aug 2018 04:40 PM
Last Updated : 17 Aug 2018 04:40 PM
மூன்றில் ஒரு பாகத்திற்கும் மேலுள்ள சீனர்கள் காலையில் நேரம் இல்லாத ஒரே காரணத்தால் காலை சிற்றுண்டி எடுத்துக்கொள்வதில்லையாம்,
இதுகுறித்து ஒரு சர்வே...
சீன ஊட்டச்சத்து சங்கத்தின் அறிக்கையின்படி, பதிலளித்தவர்களில் 11 சதவிகிதத்தினர் பெரும்பாலும் காலை உணவைத் தவிர்த்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
சீனாவில் 31 மாகாணங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஒரு சதவீதத்தினர் காலை உணவு எப்பொழுதும் எடுத்துக்கொண்டதில்லை என்று தெரிவித்தனர்.காலையில் வீட்டிலிருந்து வேலைக்குக் கிளம்ப குறைந்த நேரமே இருப்பதால் காலை சிற்றுண்டி எடுத்துக்கொள்ளமுடியவில்லை என்பதையே பலரும்தெரிவித்துள்ளனர்.
அதாவது 49 சதவீதத்தினர். தவிர, 17 சதவீதத்தினர் காலையில் பசியில்லை அல்லது காலை சிற்றுண்டி சாப்பிடும் பழக்கம் இல்லை என்ற காரணங்களைத் தெரிவித்துள்ளனர்.
9 சதவீதத்தினர் சொல்வதுதான் சிரிப்பை வரவழைக்கக் கூடியது. அவர்கள் சொல்கிறார்கள்... ''காலை சிற்றுண்டி தேவையில்லாதது...''
காலை சிற்றுண்டி எடுத்துக்கொள்வதாகச் சொன்னவர்கள், சோயாபீன்ஸ், பால் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளைவிட அதிகமாக அவர்கள் சாப்பிடும் உணவு எது தெரியுமா?
தானியங்கள், கேரட், முள்ளங்கி போன்ற பூமிக்குள் விளையும் காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள்தானாம்.
காலை சிற்றுண்டியைப் பொறுத்தவரை 15 நிமிடங்களுக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் போகக் கூடாத சிறிய அளவு உணவாக அது இருக்கவேண்டும். என்கிறார்கள் 81 சதவீதத்தினர்.
காலை நேரத்தைப் பொறுத்தவரை அவசரக்கோலம் அள்ளித்தெளிதான். காரணம் மதிய உணவின்போது சாப்பிடக்கூடிய நார்ச்சத்து, வைட்டமின் சத்துள்ள உணவுகள் எதுவும் காலை சிற்றுண்டியில் முழுமையாக ஈடு செய்ய முடியாது என்கிறார்கள் இவர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT