Last Updated : 06 Aug, 2018 02:03 PM

 

Published : 06 Aug 2018 02:03 PM
Last Updated : 06 Aug 2018 02:03 PM

அமெரிக்காவில் 7 மணி நேரத்தில் 10 இடங்களில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி

அமெரிக்காவில் 7 மணி நேரத்தில் பத்து இடங்களில் நடந்த வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகருக்கு நேற்று வன்முறை இரவு என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஃப்ரெட் வாலர் கூறும்போது,  ”சிகாகோ நகரில் ஞாயிற்றுக்கிழமை 7 மணி நேரங்களில் சுமார் பத்து துப்பாக்கிச் சூடுகள் வெவ்வேறு இடங்களில் நடந்தன. இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 5 பேர் பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  

இந்தத் துப்பாக்கிச் சூடு சில இடங்களில் இலக்கு வைத்தும், சில இடங்களில் கும்பல் மோதலாகவும் நடந்துள்ளது. துப்பாக்கிச் சூடுகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச் சூடு அதிகஅளவில் நடந்து வரும் இடமாக சிகாகோ மாறியுள்ளது ’’ என்றார். கடந்த ஜூன் மாதம் 25 ஆம் தேதி சிகாகோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் காயமடைந்தனர். 2 பேர் பலியாகினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x