Published : 21 Jul 2018 05:19 PM
Last Updated : 21 Jul 2018 05:19 PM

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு

அதிகாரிகள் போல் போலியாக நடித்து அமெரிக்கர்களை மிரட்டி பல கோடி ரூபாய் பணம் பறித்த 21 இந்தியர்களுக்கு நியூயார்க் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் போலியாக ‘கால் சென்டர்’ ஒன்றை சிலர் நடத்தி வந்துள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மூலம் அந்நாட்டில் வரி செலுத்த வேண்டியர்கள் குறித்த தகவல்களை அவர்கள் திரட்டியுள்ளனர். மேலும் அமெரிக்க உள்நாட்டு வரி துறையில் இருந்து பேசுவது போல பேசி மிரட்டியுள்ளனர். குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணத்தை செலுத்தினால் அவர்கள் மீதான வரி ஏய்ப்பு புகாரை கைவிடுவதாக கூறியுள்ளனர்.

இதனால் பயந்து பலர் அவர்கள் கூறி வங்கி கணக்கில் பணத்தை செலுத்தியுள்ளனர். குறிப்பாக வயதானவர்களை குறி வைத்து இந்த கும்பல் பணம் பறித்துள்ளது. இதுபோலவே வெளிநாடுகளில் குடியேறிய அமெரிக்களிடம், குடியேற்றத்துறை அதிகாரிகள் போல பேசி மிரட்டியுள்ளனர். இந்த மோசடியில் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பலருக்கும் நேரடியாக தொடர்பு இருந்துள்ளது. பல நாட்களுக்கு பிறகு இதுபோன்ற மோசடி நடப்பதை அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதுதொடர்பாக 21 இந்தியர்கள் உள்ளிட்டவர்கள் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், 21 இந்தியர்களுக்கும் 4 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x