Published : 17 Jul 2018 05:31 PM
Last Updated : 17 Jul 2018 05:31 PM

சிரியா முகாம்களில் ரஷ்யா தாக்குதல்: 10 பேர் பலி

சிரியா முகாம்களின் மீது ரஷ்யப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து போரில் பாதிக்கப்படும் சிரிய மக்களுக்குக்கான உதவும் அமைப்பு ஒன்று கூறும்போது, "சிரியாவின் தென்மேற்குப் பகுதியில் சிரிய அரசுப் படைகள் மற்றும் ரஷ்யப் படைகள் தாக்குதல் காரணமாக தங்கள் இருப்பிடத்திலிருந்து சிரியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஐன் எல்- தினா கிராமத்திலுள்ள ஒரு பள்ளியிலுள்ள  முகாம்களில் மக்கள் தங்கியுள்ளனர். அங்கு ரஷ்யப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர” என்று தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது.  அதிபர் ஆசாத்துக்கு உதவியாக ரஷ்யப் படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

மேலும்,  ரசாயன ஆயுதங்களை அழிப்பதற்காக, அமெரிக்க ராணுவத்தினர் கடந்த 3 மாதங்களாக அங்கு முகாமிட்டுள்ளனர். மேலும், அந்நாட்டில் உள்ள ரசாயன ஆலைகள், ஐஎஸ் தீவிரவாத முகாம்கள் மீதும் அமெரிக்கப் படையினர் அவ்வப்போது வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறார்கள். இதில் ஏராளமான அப்பாவி மக்களும் பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x