Published : 15 Jul 2018 10:08 AM
Last Updated : 15 Jul 2018 10:08 AM

உலக மசாலா: ட்ரம்புக்கு எதிராக திரண்ட லண்டன் மக்கள்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், லண்டனுக்கு வருகை தந்ததை ஒட்டி, அவருக்கு எதிராகப் போராட்டக்காரர்கள் குவிந்தனர். சுமார் 2.5 லட்சம் பேர் மத்திய லண்டனில் குழுமி, கோஷங்களை எழுப்பினர். ட்ரம்ப் உருவ ராட்சத பொம்மையைப் பறக்க விட்டும் அவரைப்போல் வேஷம் போட்டும் மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரெமி கோர்பின், உணர்வுப்பூர்வமாக உரை நிகழ்த்தினார். இதுவரை எந்த அமெரிக்க அதிபருக்கும் இதுபோன்ற எதிர்ப்பு லண்டனில் நிகழ்ந்ததில்லை. இங்கிலாந்தும் அமெரிக்காவும் நெருங்கிய நட்பு

நாடுகள். ஆனால் டொனால்டு டிரம்ப் மோசமான கொள்கைகளைக் கொண்டவராக இருக்கிறார். புலம்பெயர்ந்து வரும் மக்களை அவர் நடத்தும் விதமும் குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடமிருந்து பிரித்த விஷயமும் மக்களை மிகவும் கோபமடைய வைத்துவிட்டன. அகதிகளைப் பற்றியும் பெண்களைப் பற்றியும் அவருடைய வெறுப்புக் கருத்துகள், இன துவேஷம் போன்ற பல்வேறு விஷயங்கள் இந்த எதிர்ப்புப் பேரணியில் முக்கியப் பங்கு வகித்தன. இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, டொனால்டு ட்ரம்ப் உட்பட பலரும் எதிர்ப்பை எதிர்பார்த்தனர், ஆனால் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்பார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள்.

அங்கே போராடும் சுதந்திரமாவது இருக்கிறது…

புவேர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த மிராகிள் மில்லி என்ற 6 வயது நாய், உலகிலேயே அதிக முறை க்ளோன் செய்யப்பட்ட நாய் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. தென் கொரியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இந்த நாயிடமிருந்து 49 க்ளோன் நாய்களை உருவாக்கியிருக்கின்றனர். சியோலில் உள்ள

சூவாம் பயோடெக் ஆராய்ச்சி மையத்தில், 2006-ம் ஆண்டு முதல் க்ளோன் செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு மிராகிள் மில்லியின் உரிமையாளர், மில்லியைப் போன்று க்ளோன் செய்து தரும்படிக் கேட்டார். மில்லி சாதாரண நாய் அல்ல.

உலகின் மிகச் சிறிய நாய் என்ற கின்னஸ் சாதனையை 2012-ம் ஆண்டு பெற்றிருக்கிறது. இந்த நாய் ஏன் சிறியதாக இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள விஞ்ஞானிகள் ஆர்வமாக இருக்கிறார்

கள். அதனால் க்ளோன் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். இதுவரை 49 க்ளோன் செய்யப்பட்ட நாய்கள் வந்துவிட்டன. 1996-ம் ஆண்டு டோலி ஆடு க்ளோன் செய்யப்பட்ட முறையிலேயே இப்போதும் க்ளோன் உருவாக்கத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தவணையாக 12 நாய்கள் க்ளோன் செய்யப்பட்டு வெளிவந்தன.

இவை ஃப்ளோரிடாவில் ஒன்றாக வசித்து வருகின்றன. அனைத்தும் ஒரே மாதிரி தோற்றம், நடவடிக்கை, குணம் கொண்டவையாக இருக்கின்றன. சில நாய்கள் மட்டும் மிராகிள் மில்லியை விட உருவத்தில் சற்றுப் பெரிதாகக் காணப்படுகின்றன. “மில்லியிடமிருந்து க்ளோன் செய்யப்பட்ட நாய்கள் மில்லியைப் போலவே இருந்தாலும், மில்லியை மீள் உருவாக்கம் செய்ய முடியாது என்பது என் கருத்து” என்கிறார் அதன் உரிமையாளர்.

க்ளோன் செய்வதற்குக் கட்டுப்பாடு எதுவும் கிடையாதா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x