Published : 06 Jul 2018 12:23 PM
Last Updated : 06 Jul 2018 12:23 PM
ரஷ்யாவில் கிழக்குப் பகுதியிலுள்ள கம்சட்கா தீபகற்பப் பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து வரும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது கால்பந்து ரசிகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நில நடுக்கத்தினால் எந்தப் பாதிப்பும் இல்லை, திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய ஊடகங்கள், "ரஷ்யாவின் கிழேக்கே உள்ள கம்சட்கா தீபகற்பப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டன. எனினும் இந்த நில நடுக்கத்தினால் எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை” என்று செய்தி வெளியிட்டது.
இந்த நிலநடுக்கத்துக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. கம்சட்சா தீபகற்பப் பகுதி உலகில் அதிகம் நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் ஒன்றாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT