Published : 30 Jun 2018 03:27 PM
Last Updated : 30 Jun 2018 03:27 PM

காசாவில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் :பாலஸ்தீனர்கள் 2 பேர் பலி

காசா எல்லையில் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, "காசா எல்லையில் பேரணியாக  சென்ற பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் உட்பட 2  பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். கடந்த இருவாரத்தில் இஸ்ரேல் ராணுவத்தினரால் மூன்று பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளது.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே மோதல் வலுத்து வருகிறது. காசா எல்லையோரத்தில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேலை எதிர்த்து  கடந்த சில மாதங்களாகவே பேரணி நடத்தி வருகின்றனர்.

கடந்த மார்ச் முதல்  காசா எல்லையில் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 124 பேர் பலியாகியுள்ளனர். 13,000 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேல் தனது தாக்குதலை மீண்டும் நடத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x