Published : 25 Jun 2018 07:38 AM
Last Updated : 25 Jun 2018 07:38 AM

பறவைகளைப் போல உணர்கிறோம்: கார் ஓட்ட தொடங்கிய பெண்கள் சவுதி அரேபியாவில் உற்சாகம்

பறவைகளைப் போல தாங்கள் உணர்வதாக சவுதி அரேபியாவில் கார் ஓட்டத் தொடங்கிய பெண்கள் உற்சாகமாக பேட்டியளித்துள்ளனர்.

சவுதி நாட்டு மன்னர் சலாமனின் இளைய மகனான முகமது பின் சல்மான் பட்டத்து இளவரசராக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெறவும், கார் ஓட்டுவதற்கான அனுமதி அளித்தும் சவுதி அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து சவுதிவில் உள்ள ரியாத் நகரில் நேற்று முதல் பெண்கள் தங்களது கார்களை உற்சாகமாக ஓட்டத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து டி.வி. விவாத நிகழ்ச்சித் தொகுப்பாளரும், எழுத்தாளருமான சமர் அல்-மோக்ரன் கூறியதாவது: நான் எனது காரை பல ஆண்டுகளுக்குப் பிறகு ஓட்டுகிறேன். காரில் நான் அமர்ந்து ஓட்டும்போது கிடைக்கும் அனுபவங்களைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.

கார் ஓட்டும்போது ஒரு பட்டாம்பூச்சியைப் போல உணர்கிறேன். இல்லை. இல்லை. ஒரு பறவையைப் போன்று உணர்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். காரை ஓட்ட ஆரம்பித்த பல பெண்கள் தாங்கள் மிகவும் சுதந்திரமாகவும், பறவையைப் போலவே உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x