Published : 23 Jun 2018 08:20 AM
Last Updated : 23 Jun 2018 08:20 AM
கொரியாவில் நடந்த போரின் காரணமாக பிரிந்த குடும்பத்தினரை வரும் ஆகஸ்ட் மாதம் சந்திக்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 1950-ம் ஆண்டு முதல் 1953-ம் ஆண்டு வரை நடந்த கொரியப் போருக்குப் பிறகு, தென் கொரியா, வட கொரியா என 2 நாடுகளாகப் பிரிந்தது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் தங்களது குடும்பத்தினரைப் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் முயற்சியால் பிரிந்த குடும்பத்தினர் சந்திக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கடைசியாக 2015-ல் போரால் பிரிந்த குடும்பத்தினர் சந்தித்து பேசி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் வட கொரியா, தென் கொரியா நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் நேற்று சியோல் நகரில் அமைந்துள்ள மவுன்ட் கும்காங் ரெசார்ட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிரிந்த குடும்பங்களைச் சந்திக்க வைப்பதற்கான இடங்கள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆகஸ்ட் 20 முதல் 26-ம் தேதி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும். தென் கொரியாவிலிருந்து 100 பேரும், வட கொரியாவிலிருந்து 100 பேரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர். யார் யார் குடும்பங்கள் சந்திக்கப் போகின்றன என்பது தொடர்பான பட்டியல் ஆகஸ்ட் 4-ம் தேதி வெளியிடப் படவுள்ளது. போரின்போது பிரிந்தவர்களில் பெரும்பாலானோர் 70 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. - ஏஎப்பி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT