Published : 02 Jun 2018 08:44 AM
Last Updated : 02 Jun 2018 08:44 AM

அதிபர்கள் ட்ரம்ப் - கிம் சந்திப்புக்கு முன்பு வட - தென் கொரிய நாடுகளின் உயர்நிலைக் குழு சந்திப்பு: பதற்றத்தைத் தணிக்க ஒப்புதல்

தென் கொரியாவின் தீவிர முயற்சியால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் நேரில் சந்தித்து அணுஆயுத ஒழிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டனர். அதன்படி வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் இருவரும் சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், தென் கொரிய - வடகொரிய எல்லையில் சண்டை நிறுத்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள பான்முன்ஜோம் என்ற இடத்தில் இரு நாட்டு உயர்நிலைக் குழுவினர் நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் கடந்த 1950 -53-ம் ஆண்டுகளில் நடைபெற்ற கொரிய போரின் போது பிரிந்த குடும்பங்கள் சந்திப்பதற்கு அனுமதி அளிக்கவும், இரு நாடுகளுக்கு இடையில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும், இருநாடுகளுக்கு இடையில் ரயில், சாலை போக்குவரத்தை மேம்படுத்துவது, ஜாகர்த்தாவில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் இருநாடுகளைச் சேர்ந்த வீரர்களை ஒன்றாக அனுப்புவது, அதற்காக மக்கள் தொடர்பு அலுவலகத்தை எல்லையில் அமைப்பது உட்பட பல முக்கிய அம்சங்கள் குறித்து ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி இருநாட்டு பிரதிநிதிகளும் இந்த மாதத்தில் 2 அல்லது 3 முறை சந்தித்து இறுதி முடிவெடுக்க உள்ளனர்.- ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x