Published : 01 Jun 2018 08:43 AM
Last Updated : 01 Jun 2018 08:43 AM

மலேசியா, சிங்கப்பூர் பிரதமர்களுடன் மோடி சந்திப்பு

மலேசிய பிரதமர் மகாதிர் முகமது, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை பிரதமர் நரேந்திர மோடி கோலாலம்பூரில் நேற்று சந்தித்துப் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, சிங்கப்பூர் நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். கடந்த செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை இந்தோனேசியாவில் முகாமிட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடிஅந்த நாட்டு அதிபர் ஜோகோ விடோடாவை சந்தித்துப் பேசினார். அப்போது இருநாடுகளிடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னைர் சிங்கப்பூர் செல்லும் வழியில் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மகாதிர் முகமதுவை புத்ரஜெயாவில் சந்தித்துப் பேசினார். அப்போது இருநாட்டு கலாச்சார, வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

மலேசியாவில் இருந்து நேற்று பிற்பகலில் சிங்கப்பூருக்கு மோடி சென்றார். அங்கு நேற்று மாலை நடந்த தொழிலதிபர்கள் மாநாட்டில் மோடியும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியங் லூங்கும் சந்தித்தனர். மாநாட்டில் இரு தலைவர்களும் உரையாற்றினர்.

சிங்கப்பூர் அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு இன்று சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கையும் அதிபர் ஹலீமா யாகோபையும் மோடி சந்தித்துப் பேசுகிறார். பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில் சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் வளர்க்கப்படும் ஒரு வகை பூவுக்கு அவரின் பெயர் சூட்டப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x