Published : 04 May 2018 02:47 PM
Last Updated : 04 May 2018 02:47 PM
கலிபோர்னியாவில் முதியவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் பலியானார். மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு கலிபோர்னியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், வியாழக்கிழமை மதியம் 3.30 மணியளவில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் பெண் ஒருவர் பலியானார்.
மற்றொருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்துவிட்டார.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக புளோரிடா மாகாணத்தில் உள்ள ஸ்டோன்மேன் டக்ளஸ் பள்ளியில் கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் மாணவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து அமெரிக்காவில் துப்பாக்கி விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கூறி மாணவர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இப்பிரச்சினையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT