Published : 30 Apr 2018 12:14 PM
Last Updated : 30 Apr 2018 12:14 PM
ரஷ்யாவில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பயங்கரவாத்துக்கு எதிராக பல்வேறு நாடுகள் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சியில் இந்தியாவும், பாகிஸ்தானும் பங்கேற்க உள்ளன. இந்த கூட்டுப் பயிற்சியில் சீனா உட்பட 8 நாடுகள் பங்கேற்க உள்ளன.
இதுகுறித்து இந்திய அதிகாரிகள் தரப்பில், "இந்த கூட்டுப் பயிற்சி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் நடைபெறுகிறது. பயிற்சி ரஷ்யாவிலுள்ள உரல் மலைப் பகுதியில் செப்டம்பர் தொடங்குகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான எட்டு (இந்தியா, பாகிஸ்தான் ரஷியா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான்) நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்த அமைப்பின் நோக்கமாகும்" என்று கூறியுள்ளனர்.
இதனை கடந்த வாரம் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நீர்மலா சீதாராமனும் உறுதி செய்தார்.
மும்பை 26/11 தீவிரவாதத் தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டது. கடந்த 10 வருடங்களாக பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் சரியான நிலைப்பாட்டை எடுக்க தவறியதால் இரு நாடுகளுக்கும் இடையேயும் எந்த வித ஆரோக்கியமான பேச்சு வார்த்தைகளும் நடைபெறாமல் இருந்தன.
இந்த நிலையில் இரு நாடுகளும் தீவிரவாதத்துக்கு எதிரான பயிற்சியில் பங்கேற்க இருப்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சுதந்திரத்துக்கு பின்னர் இந்தியாவும், பாகிஸ்தானும் கூட்டு ராணுவப் பயிற்சியில் பிற நாடுகளுடன் கலந்து கொள்வது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT