Published : 20 Mar 2018 08:59 AM
Last Updated : 20 Mar 2018 08:59 AM
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இதுவரை 51 எம்.பி.க்கள் கையெழுத்திடுட்டுள்ளனர்.
இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச ஆதரவு பெற்ற கூட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக அவர்கள் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர். இதுகுறித்து காமினி லோக்குகே எம்.பி. கொழும்பில் நேற்று நிருபர்களிடம் கூறியபோது, ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இதுவரை 51 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு உள்ளனர், இந்த தீர்மானம் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் எப்போது கொண்டுவருவது என்பது குறித்து ஆலோசிக்க கொழும்பில் இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமை தாங்குவார் என்று கூறப்படுகிறது.
ராஜபக்ச பேட்டி
இதனிடையே சிங்கள ஊடகத்துக்கு மகிந்த ராஜபக்ச அளித்துள்ள பேட்டியில், “நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பாகவே பிரதமர் ரணில் பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கிறேன். இந்த வாரத்தில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்படும். மக்கள் நலனை கருத்திற் கொண்டே பிரதமரை பதவி நீக்க முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT