Published : 20 Mar 2018 08:56 AM
Last Updated : 20 Mar 2018 08:56 AM

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் ஜாமீனுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கலீதா ஜியா நடத்தி வந்த, ‘ஜியா ஆதரவற்றோர் இல்லத்துக்கு கிடைக்கப்பெற்ற நன்கொடைகளைத் தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் போலீஸார் அவரை கடந்த மாதம் கைது செய்தனர். மேலும், கலீதாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து டாக்கா நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின் ஜாமீன் வழங்கக் கோரி, டாக்கா உயர் நீதிமன்றத்தில் கலீதானு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 12-ம் தேதி விசாரித்த உயர் நீதிமன்றம், அவருக்கு 4 மாதம் ஜாமீன் வழங்கியது.

அவரது ஜாமீனுக்கு எதிராக மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்குமாறு வங்கதேச ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் அந்நாட்டு அரசாங்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மனுவை நேற்று பரிசீலித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்வதற்கு அனுமதி அளித்தனர். மேலும், இதற்கு வசதியாக, கலீதா ஜியாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு வருகிற மே 8-ம் தேதி வரை தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x