Published : 20 Mar 2018 08:54 AM
Last Updated : 20 Mar 2018 08:54 AM
குவைத்தில் இந்தியப் பணிப் பெண் சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
குவைத்தில் சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக கேரளா, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய தென்மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர் கள் குவைத்தில் தங்கியுள்ளனர். இதில் ஏராளமான இந்திய பெண்கள் வீட்டு வேலைகளை செய்து வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பணியாற்றுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டி வருகின் றனர்.
இந்நிலையில் குவைத்தில் ஒரு வீட்டில் பணியாற்றிய இந்திய பணிப்பெண்ணை அதன் உரிமையாளர் அடித்து, உதைத்து துன்புறுத்தியுள்ளார். இதில் அவரது தலை, கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த வீட்டின் உரிமையாளரின் தங்கை பரிதாபப்பட்டு இந்திய பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதுதொடர்பாக குவைத் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT