Published : 03 Mar 2018 09:13 AM
Last Updated : 03 Mar 2018 09:13 AM

கடந்த 13 நாட்களாக அரசு படை தாக்குதல்: சிரியாவில் 674 பேர் பரிதாப பலி

சிரியா அரசு படை கிழக்கு கவுட்டா பகுதியில் கடந்த 13 நாட்களாக நடத்திய வான்வழி தாக்குதல்களில் 674 பேர் பலியாகி உள்ளனர்.

சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது. தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கவுட்டா பகுதி கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தப் பகுதியை குறிவைத்து அதிபர் ஆசாத் படைகள் கடந்த இரு வாரங்களாக வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன.

இதுகுறித்து ‘வொயிட் ஹெல்மெட்’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பினர் கூறியபோது, “கிழக்கு கவுட்டா பகுதி யில் கடந்த 13 நாட்களாக அரசுப் படை நடத்திய தாக்குதல்களில் 674 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்த தீர்மானம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை” என்று தெரிவித்தனர்.

இதனிடையே கிழக்கு கவுட்டா உள்ளிட்ட பகுதிகளில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிபர் ஆசாத்துக்கு ஆதர வாக ரஷ்ய விமானப்படை நேரடி யாக போரில் ஈடுபட்டு வருகிறது. ஐ.நா. சபையில் சிரியாவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானங்களை ரஷ்யா தடுத்து வருகிறது என்று அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x