Last Updated : 13 Feb, 2018 04:43 PM

 

Published : 13 Feb 2018 04:43 PM
Last Updated : 13 Feb 2018 04:43 PM

பாக்.சிறுவர்களை இந்தியாவுக்கு எதிராக மூளை சலவை செய்யும் ஜ.உ.த., அமைப்பு

தடை செய்யப்பட்டுள்ள அமைப்பான ஜமாத் உத் தவாவின் நிறுவனரான ஹபீஸ் சயீத் இந்தியாவுக்கு எதிராக சண்டையிட சிறுவர்களை பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் ஜமா உத் உதவா அமைப்பின் சார்பில் இஸ்லமாபாத்தில் நடந்த பேரணியில் சிறுவர்கள் கையில் தூப்பாக்கியுடன் பங்கேற்றுள்ளனர்.

மேலும், காஷ்மீர் பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதியாகும். காஷ்மீர் விடுதலைக்கான ஆதரவு தொடரும் என்று எழுத்தப்பட்ட பதாகைகளும் இடப்பெற்றிருந்தன.

இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், "தெற்காசியாவின் ஆபத்தான தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவின் கிளை நிறுவன அமைப்பான ஜமாத் உத் தவா பாகிஸ்தானில் உள்ள சிறுவர்களை அவர்களுடைய சீருடைகளை அணிவித்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக சண்டையிட ஊக்குவிக்கிறது.

பாகிஸ்தானில், பல இஸ்லாம் பள்ளிகளில் காஷ்மீர் விடுதலைக்காக புனிதப் போரில் கலந்து கொள்வதற்காக குழந்தைகளை மூளைச்சலவை செய்கின்றன” என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x