Published : 11 Feb 2018 08:56 AM
Last Updated : 11 Feb 2018 08:56 AM

ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்: தலிபான் தலைவர் ஆப்கனில் கொலை

ஆப்கானிஸ்தானின் பர்மல் பகுதியில் மர்காவில் நேற்று அமெரிக்கப் படைகள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தின என்று பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது. தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பின் துணைத் தலைவர் கான் சேட் மெஹ்சூத், அவரது மைத்துனர், 2 பாதுகாவலர்கள் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். 2011-ல் கராச்சியில் மெஹ்சூத் தாக்குதல் நடத்தியதில், 18 கடற்படை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். கைபர் பக்துன்கவா மாகாணத்தின் பன்னு பகுதியில் சிறைச்சாலையை உடைத்து 400-க்கும் மேற்பட்ட கைதிகளை மெஹ்சூத் விடுதலை செய்தார். மேலும், அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதியாக மெஹ்சூத் அறிவிக் கப்பட்டவர்.- ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x