Published : 10 Dec 2017 09:28 AM
Last Updated : 10 Dec 2017 09:28 AM

ஐ.நா. அமைதிப்படை மீது தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்: காங்கோவில் 15 பேர் பலி, 53 பேர் காயம்

டி.ஆர். காங்கோ என அழைக்கப்படும் கிழக்கு காங்கோவில் ஐ.நா. அமைதிப்படை மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 15 வீரர்கள் உயிரிழந்தனர்.

டி.ஆர். காங்கோவின் வடக்கு கிவு மாகாணம், செமுலிகி என்ற இடத்தில் ஐ.நா. அமைதிப்படை முகாம் உள்ளது. இந்த முகாம் மீது நேற்று முன்தினம் இரவு தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 15 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 53 பேர் காயமடைந்தனர். அமைதிப்படை வீரர்கள் அனைவரும் தான்சானியாவை சேர்ந்தவர்கள். தவிர காங்கோ வீரர்கள் 5 பேரும் தாக்குதலில் இறந்தனர்.

வடக்கு கிவு பிராந்தியத்தில் ஏடிஎப் என்ற முஸ்லிம் தீவிரவாதக் குழு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தரேஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் காங்கோ அரசு குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஐ.நா. அமைதிப்படை மீது 1993-க்கு பிறகு நடந்த கொடூர தாக்குதல் இதுவாகும். 1993 ஜூனில் சோமாலியா தலைநகர் மொகாடிஷுவில் அமைதிப்படை மீதான தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 22 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x