Published : 10 Dec 2017 09:28 AM
Last Updated : 10 Dec 2017 09:28 AM

இராக் நாட்டில் ஐ.எஸ்.க்கு எதிரான போர் முடிந்தது

இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டில் இராக்கின் மோசூல் நகரம் உட்பட அந்த நாட்டின் பெரும் பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அமெரிக்க கூட்டுப் படைகளின் உதவியுடன் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக இராக் ராணுவம் போரில் ஈடுபட்டது.

ஐ.எஸ். வசம் இருந்த அனைத்து பகுதிகளையும் இராக் ராணுவம் படிப்படியாக மீட்டது. இதுகுறித்து அந்த நாட்டு பிரதமர் ஹைதர் அல் பாக்தாதி, தலைநகர் பாக்தாத்தில் நேற்று கூறியதாவது: இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகள் அனைவரும் அழிக்கப்பட்டுவிட்டனர் என்று தெரிவித்தார். சிரியாவிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் வேரறுக்கப்பட்டுவிட்டதாக அந்த நாட்டு அரசும் அதன் நட்பு நாடான ரஷ்யாவும் அண்மையில் அறிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x