Published : 13 Oct 2017 10:01 AM
Last Updated : 13 Oct 2017 10:01 AM

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிடமிருந்து முக்கிய நகரம் மீட்பு

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மயாதீன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை அந்த நாட்டு ராணுவம் மீட்டுள்ளது.

சிரியாவின் கிழக்குப் பகுதியில் மயாதீன் நகரம் உள்ளது. எண்ணெய் வளமிக்க இந்த நகரம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ராணுவ தலைநகராக கருதப்பட்டது. அந்த நகரை குறிவைத்து சிரியா ராணுவம் தாக்குதல் நடத்தியது. கடும் சண்டைக்குப் பிறகு மயாதீன் நகரமும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 4 கிராமங்களையும் ராணுவம் மீட்டது.

சிரியாவின் ராக்கா உள்ளிட்ட சில பகுதிகள் மட்டுமே ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. அந்த நகரை குறிவைத்து சிரியா ராணுவமும் அமெரிக்காவின் ஆதரவு பெற்ற படைகளும் தரைபோரில் ஈடுபட்டு வருகின்றன. விரைவில் ராக்கா நகரமும் மீட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x