Published : 28 Jun 2016 08:04 AM
Last Updated : 28 Jun 2016 08:04 AM
கோவா மாநில தலைநகர் பனாஜியில் ஓடும் சிற்றோடையில் பயணித்தபோது ஏற்பட்ட விபத்திலிருந்து மேயர் உயிர் தப்பினார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
செயின்ட் இனெஸ் சிற்றோடை பனாஜி நகரைச் சுற்றி அமைந் துள்ளது. இதை சுத்தப்படுத்து வதற்காக புதிதாகக் களை எடுக்கும் இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் செயல்பாடுகள் பற்றி விளக்குவதற்காக, செய்தியாளர் களுடன் மேயர் சுரேந்திர புர்டடோ நேற்று முன்தினம் இந்த இயந்திரத்தில் பயணம் செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த இயந்திரம் கவிழ்ந்தது. எனினும், இந்த சம்பவத்தில் மேயருக்கோ அவருடன் சென்றவர்களுக்கோ காயம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஆய்வாளர் தெரிவித்தார்.
இதனிடையே, சமூக ஆர்வலர் ஏரெஸ் ராட்ரிக்ஸ் மேயர் மீது புகார் செய்துள்ளார். மனித உயிர்களுக்கும் பொது சொத்துக் கும் பாதிப்பு ஏற்படும் வகையில் மேயர் பொறுப்பில்லாமல் செயல்பட்டதாக அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT