Last Updated : 18 Jan, 2017 05:27 PM

 

Published : 18 Jan 2017 05:27 PM
Last Updated : 18 Jan 2017 05:27 PM

மத்திய இத்தாலியில் ஒரு மணி நேரத்துக்குள் 3 முறை நிலநடுக்கம்

இத்தாலியின் மத்திய பகுதியில் இன்று (புதன்கிழமை) ஒரு மணி நேரத்துக்குள் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் இத்தாலியின் தலைநகரம் ரோமிலிருந்து வெகு தொலைவில் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், "இத்தாலியின் மத்திய பகுதியில் இன்று காலை 10.25 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகியது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் முன்றாவது நிலநடுக்கம் 50 மற்றும் 10 நிமிட இடைவெளியில் ஏற்பட்டன. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.70ஆகவும், 5.3ஆகவும் பதிவாகியது " என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடித் தகவல் ஏதும் இல்லை.

கடந்த ஆண்டு இத்தாலியின் மத்தியப் பகுதி மலை பிரதேசமான அமடிரைஸ் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 300 பேர் பலியாகினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x