Published : 23 Jan 2015 10:50 AM
Last Updated : 23 Jan 2015 10:50 AM

பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 7

பிரெஞ்சுப் புரட்சிக்குப் பல பின்னணிகள் - சரிந்து கொண் டிருந்த பொருளாதாரம், தவறான வரி விகிதம், மக்களிட மிருந்து பிரிந்து நின்ற திறமை யில்லாத மன்னன், உணவுப் பொருள் தட்டுப்பாடு. ஆகஸ்ட் 1792-ல் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டது. முதன் முறையாக பிரான்ஸ் குடியரசு ஆனது.

கிறிஸ்தவ திருச்சபையின் அதிகார ஆதிக்கம் சரிந்தது. குடி யுரிமை என்பதற்குத் தெளிவான வரையறை செய்யப்பட்டது. பொது மக்களும், இடதுசாரி அரசியல் அமைப்புகளும் இந்த மாற்றங்கள் உருவாகக் காரண மாயினர். மன்னர் 16-ம் லூயி பிரான்ஸி லிருந்து தப்பி ஓட முயற்சி செய்தபோது பிடிபட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கில்லட் கருவி யால் அவர் தலை கொய்யப்பட்டது.

புதிய குடியரசு “சுதந்திரம், சமத்துவம், சகோதாரத்துவம்’’ என்ற கவர்ச்சிகரமான இலக்கை அறிவித்துக் கொண்டது. ஆனால் வேறு விரும்பத்தகாத சக்திகளும் பிரான்ஸில் தலை காட்டத் தொடங்கின. குடியரசுக்கு எதிரான இயக் கங்களும் முளைவிடத் தொடங் கின. பணம் படைத்தவர்கள் இதற்குப் பின்னணியில் செயல் பட்டனர். புதிய குடியரசு திணறத் தொடங்கினது. தவிர ஆஸ்திரியா, ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை ஒன்றாகச் சேர்ந்து பிரான்ஸ்மீது இதுதான் சமயம் என்று போர் தொடுக்கத் தொடங்கின. மக்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை தோன்றியது.

அந்த காலகட்டத்தை `பயங்கரவாத ஆட்சி’ (The reign of terror) என்றே குறிப்பிடுகிறார்கள். அற்பமான காரணங்களுக்காகக் கூட மக்கள் கடுமையாக தண்டிக் கப்பட்டார்கள். தலைகள் உருண் டன. அப்போது ஆட்சியில் இருந் தவரின் பெயர் மாக்ஸ்மிலன் ரோபெஸ்பியரே. “நீதி கிடைப் பதுதான் முக்கியம். பயங்கரவாத ஆட்சியில் தப்பில்லை’’ என்று வெளிப்படையாகவே அறிவித் தார். முப்பதாயிரம் பிரெஞ்ச் மக்கள் இப்படி அரசினால் கொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் செய்த தவறு புரட்சியில் ஈடுபட்டதுதான்.

பொது மக்கள் புரட்சியாளர் களுக்கு மறந்தும்கூட ஆதரவு கொடுத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த பயங் கர நடவடிக்கைகள். குற்றம் சுமத் தப்பட்டவர்கள் தங்கள் தரப்பை வெளிப்படுத்தக்கூட வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.

இதன் உச்சகட்டமாக ரோபஸ் பியரே கைது செய்யப்பட்டார். அவர் தலை நீக்கப்பட்டது காலத்தின் கட்டாயமானது. பிறகு பொதுவான அமைப்பு ஒன்று (டைரக்டரேட்) பிரான்ஸை 5 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தது.

இதைத் தொடர்ந்து ஆட்சியைக் கைப்பற்றிய ஒருவர் தன்னை பிரான்ஸின் பேரரசர் என்று அறிவித்துக் கொண்டார் - அவர் நெப்போலியன். இத்தாலியைச் சேர்ந்த கோர்ஸிகா என்ற பகுதியில் பிறந்தவர் நெப்போலியன். இந்தப் பகுதி அப்போது பிரான்ஸின் பிடியில் வந்திருந்தது. பள்ளிப் படிப்புக்காக பிரான் ஸுக்கு அனுப்பப்பட்டார் நெப்போலியன். பிரெஞ்ச் ராணுவ அகாடமியில் பட்டம் பெற்றார். இரண்டாம் நிலைத் தளபதியானார்.

பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது. அடுத்தடுத்து மூன்று புரட்சிகள். மன்னராட்சி முடிவடைந்து குடியரசு உருவான காலகட்டம். தொடக்க கட்டப் புரட்சிகளின் போது நெப்போலியன் ராணுவத் திலிருந்து விடுமுறை எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். பிறகு ராணுவம் திரும்பியபோது முன்பு குறிப்பிட்ட ரோபெஸ்பியரே என்பவரோடு ராணுவ அமைப்பில் இணைந்து பணியாற்றினார்.

இதன் காரணமாக பின்னொரு காலத்தில் நெப்போலியன் கொஞ்ச காலத்துக்கு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். (ரோபெஸ்பிய ரேவின் உளவாளியோ இவர் என்கிற சந்தேகம்).

கொஞ்சம் கொஞ்சமாக நெப்போலியன் புகழ் உலகமெங் கும் பரவத் தொடங்கியது. 1796-லிருந்தே அவரது பார்வை உலக நாடுகளின்மீது அழுத்தமாகவே பதியத் தொடங்கியது. 1796-ல் ஆஸ்திரியாவின்மீது படையெடுத்து, அந்த ராணுவத்தைத் தோற்கடித்தார். சமரச ஒப்பந்தம் ஏற்பட்டது.

அடுத்ததாக நெப்போலியன் குறிவைத்தது வெளியே அல்ல, உள்ளே! பிரான்ஸை ஆட்சி செய்த ஐந்துபேர் கொண்ட ஆட்சிக் குழு. இங்கிலாந்தின்மீது படையெடுக்க வேண்டுமென்று நெப்போலியனிடம் கூறியது. “நம் கடற்படைகள் அதற்குத் தகுந்ததாக இப்போது இல்லை. எகிப்தின்மீது படையெடுப்போம். அதைக் கைப்பற்றினால் இந்தியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையே உள்ள வணிகப் பாதைகளைத் தடை செய்ய முடியும்” என்றார் நெப்போலியன்.

வீரத்தில் மட்டுமல்ல குள்ளநரித்தனத்திலும் புகழ் பெற்றவர் நெப்போலியன். சொன்னதைச் செய்து காட்டினார். ஆனால் தொடர்ந்த காலகட்டத்தில் பிரிட்டன் பிரான்ஸ்மீது படையெடுத்து அதன் கப்பல் படையை சின்னாபின்னமாக்கியது.

அதற்கு அடுத்த வருடமே சிரியாவின்மீது போர். வெற்றி. என்றாலும் பிரான்ஸில் குழப்பமான சூழல் உருவாவதைக் கண்டதும் தாய்நாடு திரும்பினார். திரும்பிய கையோடு ஐவர் குழுவைக் கலைத்தார். “மூன்றுபேர் போதும், அதில் நான் முதலாவது” என்றார். ஒரே ஆண்டுதான். நெப்போலியனின் படைகள் இத்தாலியில் இருந்த ஆஸ்திரியர்களை ஓடஓட விரட்டியது.

பிறகு உள்ளூர் ஆட்சியில் கவனம் செலுத்தினார் நெப்போலி யன். மத்திய ஆட்சிக்கு அதிகாரங் களைக் குவித்தார். வங்கிகளும் கல்வித் துறையும் பல மாற்றங் களைச் சந்தித்தன. போப்புடன் உறவை சீர்செய்து கொண்டார். எல்லாவற்றையும்விட குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது அவர் சீர் செய்த சட்டமுறைகள். அவர் அன்று அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்கள்தான் இன்றைய பிரான்ஸின் சிவில் சட்டத்துக்கு அடிப்படை.

1804ல் ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். இதற்காகப் பாரிஸில் குழுமியவர்களிடம் “இனி நான் பிரான்ஸின் சக்ரவர்த்தி’’ என்று முடிசூடிக் கொண்டார். ஆக பிரான்ஸில் மீண்டும் முடியாட்சி!

(இன்னும் வரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x