Last Updated : 30 Dec, 2016 09:40 AM

 

Published : 30 Dec 2016 09:40 AM
Last Updated : 30 Dec 2016 09:40 AM

சீனாவில் உலகின் மிக நீளமான புல்லட் ரயில் பாதை தொடக்கம்

சீனாவில் கிழக்கு கடற்கரை பகுதியையும் தென்மேற்கு பகுதியையும் இணைக்கும் உலகின் மிக நீளமான ரயில் பாதை தொடங்கப்பட்டுள்ளது.

உலகில் மக்கள்தொகை அதிகம் உள்ள நாடான சீனாவில் அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. குறிப்பாக மக்கள் போக்குவரத் துக்கு அதிவேகமான புல்லட் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன் அடுத்தகட்டமாக மிகவும் வளர்ச்சி அடைந்த கிழக்கு கடற் கரை பகுதியையும் வளர்ச்சி குறைந்த தென் மேற்கு பகுதியை யும் இணைக்கும் வகையில் அதிவேகமான புல்லட் ரயில் பாதை தொடங்கப்பட்டுள்ளது.

ஷாங்காய் - குன்மிங் இடையே 2,252 கி.மீ. தூரத்துக்கு இந்த ரயில் பாதை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில் பாதை ஜிஜியாங், ஜியாங்ஸி, ஹுனான், குய்ஸோ, யுனான் ஆகிய 5 மாகாணங்களை இணைக்கிறது. தற்போது ஷாங்காயில் இருந்து குன்மிங் வரை செல்ல 34 மணி நேரம் ஆகிறது. இந்த புதிய புல்லட் ரயில் பாதையில் 11 மணி நேரமாக குறைந்துள்ளது என்று சீனா ரயில்வே கார்ப்பரேஷன் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த ரயில் மணிக்கு அதிகபட்சமாக 330 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது. சீனாவிலேயே கிழக்கு - மேற்கு பிராந்தியத்தை இணைக்கும் மிக நீளமான ரயில் பாதை இது.

ஏற்கெனவே பெய்ஜிங் - குவாங்ஸோ மாகாணத்தை இணைக்கும் 2,298 கி.மீ. தூர ரயில் பாதை கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வரும் 2030-க்குள் 45,000 கி.மீ. தூரத்துக்கு ரயில் பாதையை நீட்டிக்கவும் சீனா திட்டமிட் டுள்ளது. புல்லட் ரயில் தொழில் நுட்பத்தை இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு சீனா விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x