Last Updated : 06 Oct, 2016 02:55 PM

 

Published : 06 Oct 2016 02:55 PM
Last Updated : 06 Oct 2016 02:55 PM

சிரியா - துருக்கி எல்லையில் குண்டுவெடிப்பு: 20 பேர் பலி

சிரியா – துருக்கி எல்லையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிரியாவை சேர்ந்த போராட்டக்காரர்கள் 20 பேர் பலியாகினர்.

இந்தக் குண்டு வெடிப்புக் குறித்து சிரிய மனித உரிமை ஆணையம், "சிரியா - துருக்கி எல்லைப் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிரியாவை சேர்ந்த 20 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்" எனக் கூறியுள்ளது.

துருக்கியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அனடோலியா செய்தி நிறுவனம் சிரிய-துருக்கி எல்லையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 20 பேர் பலியானதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தக் குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுபேற்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x