Last Updated : 07 Dec, 2016 04:41 PM

 

Published : 07 Dec 2016 04:41 PM
Last Updated : 07 Dec 2016 04:41 PM

சிரியாவில் வான்வழித் தாக்குதலுக்கு 25 பேர் பலி

சிரியாவில் புரட்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான இட்லிப் நகரின் புறப்பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 25 பேர் பலியாகினர்.

இது குறித்து லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிரிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட தகவலில், "சிரியாவில் புரட்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியான இட்லிப் நகரின் புறப்பகுதியில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 25 பேர் பலியாகினர். இதேபோன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட மற்றுமொரு தாக்குதலில் 34 பேர் பலியாகினர். பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வான்வழித் தாக்குதலை சிரிய அரசுப் படைக்கு ஆதரவாக செயல்படும் ரஷ்ய படைகள் நிகழ்த்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சிரியாவில் புரட்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளைக் கைப்பற்ற சிரிய அரசுப் படைகள் தீவிரமாக முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x