Published : 28 Jun 2016 09:57 AM
Last Updated : 28 Jun 2016 09:57 AM

சிங்கப்பூர் விமானத்தில் தீ: 241 பேர் உயிர் தப்பினர்

சிங்கப்பூர் விமானம் நடுவானில் பறந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. விமானி சாதுரியமாக செயல்பட்டு அவசரமாக விமானத்தை தரையிறக்கியதால் 241 பேர் நூலிழையில் உயிர் தப்பினர்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பயணிகள் விமானம் சிங்கப்பூரில் இருந்து 222 பயணிகள், விமானிகள் உட்பட 19 ஊழியர்களுடன் இத்தாலியின் மிலன் நகருக்கு நேற்று காலை புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்தபோது வலதுபக்க இன்ஜினில் திடீரென தீப்பிடித்தது.

இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரி வித்தார். அந்த விமானம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும்போதே சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக் கப்பட்டது. விமானியின் சாதுரியத் தால் விமானத்தில் இருந்த 241 பேருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x