Published : 03 Jul 2017 07:50 AM
Last Updated : 03 Jul 2017 07:50 AM
சவுதி அரேபியாவின் கடற்கரையில் அலைகளில் விளையாடிக் கொண்டிருந்த இந்திய சிறுமி மாரடைப்பால் உயிரிழந்தார்.
உத்தரபிரதேசம் ராம் நகரைச் சேர்ந்தவர் பர்வேஷ் அலி கான். இவர் சவுதி அரேபியாவின் டமாம் நகரில் கடந்த 20 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 30-ம் தேதி தனது மனைவி, மகள், மகனுடன் அல்-கோபார் கடற்கரைக்கு சுற்றுலா சென்றார்.
கடல் அலைகளில் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டி ருந்த பர்வேஷ் அலியின் மகள் சாஹர் பர்வேஷ் (15) திடீரென நிலை குலைந்து சரிந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்ட தாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT